கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

புதுவையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த ஹரீஷ்குமார் (வயது 21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 167 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story