1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

வெளியூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய இருந்தது கண்டறியப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் தேனி பெரியகுளத்தை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 37), வேடசந்தூரை சேர்ந்த கன்னியப்பன் (25) என்பது தெரியவந்தது. வெளியூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய இருந்தது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






