ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்ததில் 3 ஊழியர்கள் படுகாயம்

ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்து 3 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்
சென்னை,
நாகர்கோவில் - நெல்லை ரெயில் பாதையில் பழையாறு பகுதியில் நேற்றிரவு நடந்த ரெயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்து 3 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ரெயில் பாதை சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது.
இந்த பணி காலை வரையிலும் நீடித்த நிலையில் நாகர்கோவில் - நெல்லை மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை - நாகர்கோவில் மார்க்கத்தில் பல்வேறு ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, செங்குளம் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





