6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்
முன்பதிவு குறைவாக இருப்பதால் 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் முன்பதிவு குறைவாக இருப்பதால், 22 முதல் 29-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் (22-ந்தேதி) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு கோட்டயம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் (06121) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 23-ந்தேதி மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரெயில் (06122) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில் (06153) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரெயில் (06154) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06054) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை செல்வதாக அறவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் (06053) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.






