தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் வாக்குவாதம்.. அடுத்த நடந்த விபரீதம்


தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் வாக்குவாதம்.. அடுத்த நடந்த விபரீதம்
x

குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதி தீபாவளியை கொண்டாடினர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. விவசாயி. இவருடைய 2-வது மகள் ரூபிகா (வயது 21).

இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். புதுமண தம்பதியான பாண்டி, ரூபிகா தலை தீபாவளியை கொண்டாட கடந்த 19-ந் தேதி களத்துப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினர்.

இந்நிலையில் பாண்டி நேற்று ரூபிகாவிடம் வேலைக்கு செல்லப்போவதாக கூறினாராம். தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? என ரூபிகா கூறியுள்ளார். இருவருக்கும் இதுசம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாண்டி நேற்று வேலைக்கு சென்றுவிட்டார்.

தான் சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் ரூபிகா மனவருத்தம் அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

1 More update

Next Story