சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்ற சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பெண் உள்பட 2 பயணிகளின் உடைமைகளில் பரிசோதனை செய்ததில் அதில் 12 கிலோ எடைகொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 12 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






