கடலூரில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு இன்று 10க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக சென்றனர்.
இந்நிலையில், கடலூரின் மணலூர் பகுதியில் இன்று அதிகாலை பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது சாலையில் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பாதயாத்திரை சென்ற 3 பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story