திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்



பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
சேலம் ரெயில்வே கோட்டத்தின் கரூர் பிரிவில் உள்ள ரெயில்வே பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சியில் இருந்து ஈரோடு வரை செல்லும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire