திண்டுக்கல்: தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்


திண்டுக்கல்: தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Feb 2025 9:02 AM IST (Updated: 26 Feb 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 15 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கலில் இருந்து நிலக்கோட்டை சென்ற பஸ்சும், வத்தலகுண்டுவில் இருந்து சின்னாளப்பட்டிக்கு சென்ற பஸ்சும் சின்னாளப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 15 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பஸ் அதிவேகமாக வந்ததே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

1 More update

Next Story