சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றிபெறுவோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட ஜமாலியா லேன் பகுதியில் ரூ. 23 மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர், 130 பயனாளர்களுக்கு குடியிருப்பு வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றிபெறுவோம். தி.மு.க. தேர்தல் பணியை தீவிரப்படுத்தி நீண்ட நாள் ஆகிறது' என்றார்.