“100 ஆண்டுகளை கடந்தும் திமுக நிலைத்து இருக்கும்”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


“100 ஆண்டுகளை கடந்தும் திமுக நிலைத்து இருக்கும்”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x

தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திமுக இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மெய்சிலிர்த்து நிற்கிறேன்…

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டைச் சேர்ந்த ஓவியர் T.R.கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது.

அவருக்கு வயது 87-ஆம்!.. அவரது எழுத்தில் வெளிப்படும் கழகப் பற்றைக் காணுங்கள்… தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story