நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 530 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) 535 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






