நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு
x

கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 530 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) 535 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story