அவசர பராமரிப்பு பணி: தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் இன்று தற்காலிகமாக மூடல்


அவசர பராமரிப்பு பணி: தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் இன்று தற்காலிகமாக மூடல்
x

தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடியில் மட்டக்கடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது ரெயில்வே கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (9.8.2025, சனிக்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை (10.8.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி வரை மூடப்படும். எனவே வான ஓட்டிகள் சாலை போக்குவரத்துக்கு அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story