அவசர பராமரிப்பு பணி: தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் இன்று தற்காலிகமாக மூடல்

தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடியில் மட்டக்கடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது ரெயில்வே கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (9.8.2025, சனிக்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை (10.8.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி வரை மூடப்படும். எனவே வான ஓட்டிகள் சாலை போக்குவரத்துக்கு அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





