கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
கரூர்
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீதும் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story






