கரூர் துயரம்: அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது - ரஜினிகாந்த் வேதனை


கரூர் துயரம்: அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது - ரஜினிகாந்த் வேதனை
x

கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story