பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (3.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மாங்காடு: குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு, பள்ளி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவனம் சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர்.
சோமங்கலம்: சோமங்கலம், மேலத்தூர், டி.சி.நகர், சக்தி நகர், பூந்தண்டலம், புதுபேடு மேடு, புதுப்பேடு பள்ளம், நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, நல்லூர், திருப்பதி நகர்.
ஆலந்தூர்: எம்.கே.என்.ரோடு ஒரு பகுதி, மதுரை தெரு, மடுவங்கரை 1, 2, 3 & 5 தெரு, ராமசாமி பந்தல் தெரு, ஜால் நாயக்கர் தெரு, தர்மராஜா கோயில் தெரு, அப்பாவு முதலி தெரு, நத்தம் சுபேர் தெரு, குருபாக் தெரு, ஆசர்கானா தெரு, லஷ்கர் தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, இப்ராகிம் தெரு.
ஆதம்பாக்கம்: செங்காளியம்மன் தெரு, சீனிவாசன் தெரு, பாரதியார் தெரு, செல்வகணபதி தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, பார்த்திபன் தெரு, ராஜலட்சுமி தெரு, சபாபதி தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, மணிமேகலை தெரு, கஜலஷ்மி தெரு, தாமஸ் நகர், உஷா நகர் 1வது, 2வது தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, கோபிநாதன் தெரு, சத்தியநாராயணன் தெரு.
சோழிங்கநல்லூர்: சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோயில் செயின்ட் பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் சாலை, மயிலை பாலாஜி நகர் பார் I, II, III மற்றும் IV, தந்தை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை, கிரீன் கோர்ட், ஜெகநாதபுரம், அண்ணாசாலை மெயின் ரோடு, ஜெயச்சந்தை மெயின் சாலை, ஆர். தோட்டம், ஆசான் கல்லூரி சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.
கே.கே.நகர்: கன்னிகாபுரம் 1வது, 2வது, 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது, 2வது, 3வது, 4வது, 5வது தெரு & குறுக்குத் தெரு, மீரான்சாஹிப் தெரு, ராஜமன்னார் சாலையின் ஒரு பகுதி, சத்யா தோட்டம், சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் அஸ்டா, ஏவிஎம் ஸ்டுடியோ, கேப்பில்லா ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, குமரன் காலனி மெயின் ரோடு, சாலிகிராமம், 80 அடி சாலையின் ஒரு பகுதி, ராணி அண்ணா நகர், பி.டி.ராஜன் சாலையின் ஒரு பகுதி, 14 & 15வது செக்டார் கே.கே.நகர் (94வது தெருவில் இருந்து 104வது தெரு), எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி.லிங்கம்சாலை, அழகர்பெருமாள்கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம்.
அம்பத்தூர் பொன்னியம்மன் நகர்: கேலக்ஸி சாலை, பெரியார் தெரு, சிவப்தம் தெரு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






