அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com