மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
x

சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தென்காசி

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (11.12.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story