பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு

பாமக பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை அன்புமணிக்கு முகுந்தன் அனுப்பியுள்ளார்.
சென்னை,
பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். ராமதாஸ் குலதெய்வம் என்றும் அன்புமணி எதிர்காலம் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.பாமக பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை அன்புமணிக்கு முகுந்தன் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன்.
சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம், அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






