நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு


நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
x

கோப்புப்படம் 

நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை

மராட்டியத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், நீட் தேர்வு நீட்டாக இல்லை (Neat), அதற்கான காரணங்கள் எங்களிடம் உள்ளன.

தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story