சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 24 ஆண்டுகள் சிறை

பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story






