தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் 6.12 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையம்


தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் 6.12 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது  - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 21 Nov 2025 11:55 PM IST (Updated: 22 Nov 2025 5:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முகவர்களாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2.38 லட்சம் பேர் களத்தில் உள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பி.எல்.ஓ. அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வரச் சொல்லி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை அளிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 6 கோடியே 12 லட்சத்து 78 ஆயிரத்து 8 படிவங்கள், அதாவது 95.58 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. அவற்றில் 1 கோடியே 84 லட்சத்து 72 ஆயிரத்து 503 படிவங்கள் அதாவது 28.81 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். பணியாற்றி வருகின்றனர். அங்கு 9 லட்சத்து 70 ஆயிரத்து 217 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 94.97 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 52 படிவங்கள் அதாவது 39.65 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story