மது குடித்து தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட தாயை அரிவாளால் வெட்டிய மகன் - சென்னையில் பயங்கரம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவரது மகன் மிதுன். இவர் மதுபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில், மிதுன் இன்று மது குடித்துவிட்டு போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, மகன் மிதுனை அவரது தாயார் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். மேலும், தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மிதுன் தான் வைத்திருந்த அரிவாளால் தாயை சரமாரியாக வெட்டினார்.
மகன் அரிவாளால் வெட்டியதில் ராஜேஸ்வரியின் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வெட்டு காயத்திற்கு தலையின் முன்பகுதியில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறித்த போலீசார், மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story