தமிழ்நாடு பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற பூமி - தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு

நான் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் எனக்கு எல்லாமே கிடைத்தது தமிநாட்டில்தான் என நடிகை தேவயானி பேசினார்.
தமிழ்நாடு பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற பூமி - தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு
Published on

சென்னை,

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியில் நடிகை தேவயானி பேசியதாவது:-

நான் பிறந்தது வளர்ந்தது மும்பைதான். ஆனால் நான் இன்றைக்கு என்னவா இருக்கேனோ அது எல்லாமே இந்த தமிழ் பூமி கொடுத்தது. தமிழ்நாடு ரொம்ப அழகான பூமி. பாதுகாப்பான பூமி. பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற பூமி. தமிழ்நாடு வாழவைக்கும் பூமி இங்கு யார் வந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றையும் கொடுக்கும்.என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com