தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும் - வைரமுத்து


தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும் - வைரமுத்து
x

கோப்புப்படம்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும் என வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன். சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை =நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது. தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டும்; கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும். இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம் .அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story