திருவாரூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


திருவாரூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்(வயது 65). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தலையாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் சதாசிவம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகையில் உள்ள சிறையில் அடைத்தனர். வழக்கின் இறுதி கட்ட விசாரணைக்காக அவரை போலீசார் திருவாரூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தனர்.

இந்த வழக்கில் திருவாரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி சரத்ராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சதாசிவத்துக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறை தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி தொகையாக ரூ.7 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

1 More update

Next Story