திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கம்மாளங்குளம், ராமையன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு(எ) சுடலைமணி (வயது 29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், சுடலைமணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், சுடலைமணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (22.5.2025) அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






