இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 April 2025 6:39 PM IST
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாளநடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிப்புபோதைப்பொருள் விவகாரத்தில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கைதான நடிகர் ஜாமினில் விடுவிப்பு
- 19 April 2025 5:25 PM IST
- போதைப் பொருள் பயன்பாடு - ஒப்புக்கொண்ட மலையாள நடிகர்
- போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ
- போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட நிலையில் நடிகரை கைது செய்த போலீசார்
- நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு
- போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது
- 19 April 2025 3:48 PM IST
மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்
கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். இதன்படி டிரம்ப் நிர்வாகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக மஸ்க் கருதப்படுகிறார், மேலும் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும் கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதற்கும் இலக்காகக் கொண்ட அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) முன்னெடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு முன்னணி நிறுவனங்களை எலான் மஸ்க் நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் டெஸ்லா கார் நிறுவனத்தின் விற்பனையகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை தொடங்கவும் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவையை வழங்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், எலான் மஸ்க் நேற்று தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “"பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- 19 April 2025 3:38 PM IST
- காதல் திரைப்பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
- நடிகர் சுகுமாரன் மீது துணை நடிகை புகார்
- திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
- துணை நடிகை புகார் தொடர்பாக சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
- மோசடி செய்த பணத்தை காசோலையாக வழங்கிய நடிகர் சுகுமாரன்
- 19 April 2025 1:59 PM IST
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனை தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- 19 April 2025 12:56 PM IST
வைகோவுடன் துரை வைகோ நேரில் சந்திப்பு
பா.ம.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வலுத்துள்ளது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று விலகியுள்ளார்.
அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவை அவருடைய மகன் துரை வைகோ நேரில் சந்தித்து பேசினார். அவருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்த நிலையில் அவருடைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.