தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி

தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
Published on

தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த மருதநாயகம் மகன் சிவகுமார் (வயது 41), கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலையில் மாப்பிள்ளையூரணியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பேது வீட்டு வாசல் அருகே அறுந்து கிடந்த வயரை எடுத்து பேட முயன்றபேது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com