திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலி


திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 12 April 2025 2:28 AM IST (Updated: 12 April 2025 3:25 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் இருவேறு சம்பவங்களில் ரெயில் மோதி இருவர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த புட்லூர்- செவ்வாப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரெயில் மோதி இறந்த நபர்கள் யார்? யார்? என தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை திருவள்ளூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர்களது விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story