விழுப்புரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை


விழுப்புரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
x

கோப்புப்படம் 

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் அடுத்த கொல்லூர் கிராம எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் தீன திரிஷா (19 வயது).

இவர் கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story