பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரியில் இருந்து நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






