ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீதிக் கட்சி தொடங்கிய நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நம் உரிமைக்குரலின் உதயம்!.. இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற பிராமணரல்லாதோர் அறிக்கையைச் (#NonBrahminManifesto) செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்..! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story