சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
x

வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

விழுப்புரம்,

திண்டிவனம் தாலுகா சித்தேரிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் விஜயகுமார் (வயது 30). இவர் கடந்த 12.5.2025 அன்று 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து விஜயகுமாரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். அதன்பேரில் விஜயகுமாரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story