திருப்பதி: தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி


திருப்பதி: தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி
x
தினத்தந்தி 12 March 2025 2:43 AM IST (Updated: 12 March 2025 5:55 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதன்பிறகு ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதந்த தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தெப்போற்சவத்தின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

அதேபோல் தெப்போற்சவத்தின் 5-வது நாளான நாளை (வியாழக்கிழமை) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதோடு வருடாந்திர தெப்போற்சவம் நிறைவடைகிறது.


Next Story