7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story