காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்
x

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

சென்னை

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிக்க்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று கரையை கடக்க கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story