மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு


மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 21 April 2025 11:25 PM IST (Updated: 22 April 2025 1:34 AM IST)
t-max-icont-min-icon

மேகாலயாவில் இன்று மதியம் 3.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஷில்லாங்,

மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.57 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

1 More update

Next Story