அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி


அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
x

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் லூசியானா மாகாணம் அல்மான்ஸ்டர் அவென்யூ பாலத்தில் நேற்று மாலை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

அதேவேளை, இந்த பாலத்தில் இருந்து 45 நிமிட பயண தொலைவில் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

நியூ ஆர்லஸ் நகரில் பேரணி மற்றும் கொண்டாட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story