பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை


பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை
x

ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.

திருச்சி,

திருச்சியில் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க. தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story