4-வது டெஸ்ட்: ஜடேஜா, சுந்தர் சதம் அடித்து அசத்தல்


4-வது டெஸ்ட்: ஜடேஜா, சுந்தர் சதம் அடித்து அசத்தல்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 27 July 2025 8:02 PM IST (Updated: 27 July 2025 10:34 PM IST)
t-max-icont-min-icon

கேப்டன் சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.

பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் டிரா செய்யும் நோக்கில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலை பெற வைத்தது. சிறப்பாக ஆடி இருவரும் சதம் அடித்தனர். டெஸ்ட் போட்டிக்ளில் ஜடேஜா அடித்த 4-வது சதம் இதுவாகும். வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சதம் அகும்.

1 More update

Next Story