மகளிர் டி20: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி


மகளிர் டி20: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி
x

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

பெர்மிங்கம்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 4 ஆட்டங்களில் 3ல் இந்தியாவும், 1ல் இங்கிலாந்தும் வெற்றிபெற்றது. டி20 தொடரை இந்தியா ஏற்கனவே வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் பெர்மிங்கமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷிபாலி வர்மா 75 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் சார்லி டீன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா, டேனியல் களமிறங்கினர். சோபியா 46 ரன்களும், டேனியல் 56 ரன்களும் சேர்ந்த்தனர். பின்னர் களமிறங்கிய மையா 16 ரன்களிலும், கேப்டன் பியூமவுண்ட் 30 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியா மகளிர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து மகளிர் அணி திரில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றபோது 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

1 More update

Next Story