முதல் டி20: இந்திய அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை


முதல் டி20: இந்திய அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
x
தினத்தந்தி 21 Dec 2025 8:54 PM IST (Updated: 21 Dec 2025 9:57 PM IST)
t-max-icont-min-icon

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது

விசாகப்பட்டினம்,

இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி -இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி இலங்கை அணி ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் விஷ்மி குணரத்ன 39 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 122 ரன்கள் இலக்குடன் இந்தியா விளையாடுகிறது.

1 More update

Next Story