ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது: கே.எல்.ராகுல்


ரிஷப் பண்ட்  ரன் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது:  கே.எல்.ராகுல்
x

பின்னர் கே.எல். ராகுல் சதமடித்தார்.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட பண்ட் - ராகுல் ஜோடி பொறுமையாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார்.இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 97 ரன்களில் இருந்த கே.எல். ராகுல் அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் அடித்து 98 ரன்களை தொட்டார். அடுத்த பந்தை சந்தித்த பண்ட் டாட் செய்தார். அதேவேளை 98 ரன்களில் இருந்த கே.எல்.ராகுல் உணவு இடைவேளைக்கு முன் சதத்தை அடிக்கட்டும் என்று நினைத்த பண்ட் 3-வது பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பண்ட் அடித்த பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் அற்புதமாக ரன் அவுட் செய்தார். இதனால் அவசரப்பட்டு ஓடிய பண்ட் ரன் அவுட் ஆனார்.

பின்னர் கே.எல். ராகுல் சதமடித்தார் . அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து ஜடேஜா அரைசதமடித்து 72 ரன்களில் ஆட்டமிழந்தார் . இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது . இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது .

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ரன்-அவுட் தொடர்பாக பேசியுள்ள கே எல் ராகுல் கூறியதாவது,

பஷீர் அந்த இறுதி ஓவரை வீசினார், இதனால் மதிய உணவுக்கு முன் சதத்தை அடிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைத்தேன். இதனால் ரிஷப் ஸ்ட்ரைக்கை எனக்கு கொடுக்க விரும்பினார். ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது. என தெரிவித்தார் .

1 More update

Next Story