ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

இந்தியாவின் தேஜஸ்வனி இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சுல்,
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் சுல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றுக்கு 8 பேர் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் இந்தியாவின் தேஜஸ்வனி இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெலாரசின் அலினா வெள்ளிப்பதக்கமும் (29 புள்ளி), ஹங்கேரியின் மிரியம் ஜாக்கோ வெண்கலப்பதக்கமும் (23 புள்ளி) பெற்றனர். இந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சீனா 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story






