பெங்களூரு: நட்சத்திர தம்பதி மீது தாக்குதல் - போலீசில் புகார்


பெங்களூரு: நட்சத்திர தம்பதி மீது தாக்குதல் - போலீசில் புகார்
x

image courtecy: instagram@harshikapoonachaofficial

தினத்தந்தி 21 April 2024 1:33 AM GMT (Updated: 21 April 2024 1:42 AM GMT)

ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வந்தபோது தங்களை 2 பேர் தாக்கியதாக கூறினர்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக இருப்பவர் ஹர்ஷிகா பூனச்சா. இவரது கணவர் புவன். இவரும் நடிகர் ஆவார். சமீபத்தில் இந்த நட்சத்திர தம்பதி பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தனர். புறப்படும்போது அங்கு வந்த 2 பேர் தம்பதியிடம் தகராறு செய்தனர்.

மேலும் அவர்கள், நடிகை ஹர்ஷிகா பூனச்சா மற்றும் அவரது கணவர் புவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடிகை ஹர்ஷிகா பூனச்சாவும், அவரது கணவர் புவனும் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

பின்னர் நடிகை பூனச்சாவும்-புவனும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றோம். சாப்பிட்டுவிட்டு காரை எடுக்க வந்தபோது எங்களை 2 பேர் தாக்கினர். அவர்களுடன் 20 பேர் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவ்வாறு கூறினர்.



Next Story