அனிருத் தரும் ஆச்சரியம்


அனிருத் தரும் ஆச்சரியம்
x

இசை மீதான தனக்குள்ள காதல் காரணமாக பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடும் போது சம்பளம் வாங்குவதில்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, டி.இமான், சந்தோஷ் நாராயணன் உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

ஆனால் இந்த பாடல்களுக்கு அவர் இதுவரை சம்பளம் வாங்கியதே கிடையாதாம். இசை மீதான தனக்குள்ள காதல் காரணமாக பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடும் போது சம்பளம் வாங்குவதில்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் இந்த செயல்பாடு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


Next Story