பெண், குழந்தையின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு: இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறை


பெண், குழந்தையின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு: இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறை
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

பெண் மற்றும் குழந்தையின் படங்களை ஆபாசமாக சித்தரித்த வழக்கில் இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவமொக்கா:

பெண் மற்றும் குழந்தையின் படங்களை ஆபாசமாக சித்தரித்த வழக்கில் இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆபாசமாக சித்தரித்து...

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள கிராமத்தில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் எதிர்வீட்டில் 30 வயது பெண் தனது 6 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் ெபண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் முன்பகையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்பகை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு அந்த இளம்பெண், எதிர்வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் அவரது மகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த படத்துக்கு கீழ், ஆபாச வார்த்தைகளையும் பதிவிட்டு உள்ளார்.

10 மாதம் சிறை

இதுகுறித்து அந்த பெண் பத்ராவதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த இளம்பெண் ஜாமீனில் ெவளியே வந்தார். இந்த வழக்கில் போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது இளம்பெண் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story