மராட்டிய மாநிலத்தில் இன்று 10,107 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் தற்போது 1,36,661 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 10,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,34,880 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 237 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,390 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 10,567 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,79,746 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 1,36,661 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று 830 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இன்று 1,300 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 14,907 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story