“காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன்” - ராகுல் காந்தி


“காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன்” - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 Aug 2021 4:04 PM IST (Updated: 10 Aug 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மக்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்றும் காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக, ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள் கட்சி அலுவலகத்தை இன்று அவர் திறந்து வைத்தார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது;-

“எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும் அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீரிக்களின் பழக்க வழக்கங்கள் சிந்தனை ஓட்டம் ஆகியவை என்னிடமும் உள்ளது.

நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. காஷ்மீர் பிரச்சினையை அன்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் வேறு வழியில் தீர்க்க முயற்சித்தோம் ஆனால் பா.ஜ.க. அனைத்தையும் சிதைத்து விட்டது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.

அன்பு மற்றும் புரிதலின் உறவை நான் விரும்புகிறேன். நான் உங்களுக்கு துணை நிற்பேன், உங்களுக்கான மாநில அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் வரும் போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டேன்.  தற்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பம். நான் மீண்டும் மீண்டும் வருவேன்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story